ஓசை அமைப்பின் சார்பில் "சூழல் சந்திப்பு" நிகழ்ச்சி


ஓசை அமைப்பின் சார்பில் இவ்வாண்டின் இறுதி  "சூழல் சந்திப்பு" மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி சித்தாபுதுரில் நேற்று நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக Dr.ஈ.விஜயராகவன் கலந்துக் கொண்டு வனவிலங்குகள் மீட்பு பணியில் எனது அனுபவங்கள் என்ற தலைப்பில் மீட்பு பணி குறித்த அனுபவங்களை  பகிர்ந்துகொண்டார். இவ்விழாவிற்கு ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர் டாக்டர் சண்முகசுந்திரம் தலைமை தாங்கினார். 



முன்பாக மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் முதல்வர் அம்மா அவர்கள் வன பதுகாப்பாளர்களுக்கு வாகன வசதி செய்து கொடுத்தும், யானைகளுக்கு புத்துணர்ச்சி முகாம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இயற்கையை பாதுகாப்பதில் பெருந்துணையாக இருந்தார் எனவும் கூறினர்.. மேலும் சாகித்ய அகாடமி விருது பெற்ற வண்ணதாசன் அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.



இதுகுறித்து ஓசை அமைப்பின் செய்யது அவர்கள் கூறுகையில், வர்தா புயலால் சென்னையில் பாதிக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் வெளிநாட்டு மரங்கள்,எனவே வெளிநாட்டு மரங்களை தவிர்த்த மண் சார்ந்த நாட்டு மரங்களை நட வேண்டும் எனவும், பொள்ளாச்சி சாலை விரிவாக்கத்திற்காக அகற்றப்பட்ட மரங்களை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல பகுதிகளில் நடவு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறினார். 



இந்நிகழ்ச்சியில் தன்னார்வு தொண்டர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...